பாண்டிச்சேரியில் தொடங்கிய பிரபுதேவா & ஐஸ்வர்யா ராஜேஷ் திரைப்படம்!

Webdunia
வெள்ளி, 6 ஆகஸ்ட் 2021 (17:30 IST)
நடிகர் பிரபுதேவா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் தொடங்கியுள்ளது.

குலேபகாவலி மற்றும் ஜாக்பாட் ஆகிய படங்களை இயக்கியவர் கல்யாண். இந்த இரண்டு படங்களுமே ப்ளாப் என்றாலும் மீண்டும் அவர் இயக்கத்தில் நடிக்கிறார் பிரபுதேவா. இந்த படத்தை அபிஷேக் பிலிம்ஸ் தயாரிக்க உள்ளது. இந்த படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்.

இந்நிலையில் இன்று இந்த படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் தொடங்கியுள்ளது. படத்தின் பூஜை புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்