அரண்மனை 4 லேட்டஸ்ட் ஷூட்டிங் அப்டேட்! மின்னல் வேகத்தில் சுந்தர் சி!

Webdunia
செவ்வாய், 30 மே 2023 (08:04 IST)
தமிழில் நகைச்சுவை பேய்ப் படங்களின் வரிசையைத் துவக்கிவைத்ததில் 2014ல் வெளிவந்த அரண்மனை படத்தின் வெற்றிக்கு முக்கியப் பங்கு உண்டு. 2014ல் துவங்கிய அரண்மனை வரிசையின் மூன்று பாகங்கள் இதுவரை வெளியாகியுள்ளன. இந்நிலையில் இப்போது சுந்தர் சி லைகா தயாரிப்பில் அரண்மனை படத்தின் நான்காம் பாகத்தை தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இப்போது விஜய் சேதுபதி அந்த படத்தில் இருந்து வெளியேறி, சுந்தர் சி யே கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு முக்கியக் காரணம் விஜய் சேதுபதிக்கு இப்போது மார்க்கெட் குறைந்துள்ளதால் சம்பளத்தைக் கறாராக குறைத்து பேசினாராம் சுந்தர் சி. ஆனால் அதற்கு விஜய் சேதுபதி ஒத்துக் கொள்ளாததால்தான் அவர் வெளியேறியதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் கதாநாயகிகளாக தமன்னா மற்றும் ராஷி கண்ணா நடித்து வருகின்றனர். படத்தின் முக்கியமான சில காட்சிகளை பாலக்காட்டில் உள்ள அரண்மனை ஒன்றில் சுந்தர் சி சமீபத்தில் படமாக்கி முடித்துள்ளாராம். படத்தில் சுந்தர் சிக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடிப்பதாகவும், தமன்னாவுக்கு ஜோடியாக சந்தோஷ் ப்ரதாப் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்