83 வயது மூதாட்டியை கற்பழித்துக் கொன்ற 14 வயது சிறுவன்

Webdunia
ஞாயிறு, 9 செப்டம்பர் 2018 (12:53 IST)
அமெரிக்காவில் 14 வயது சிறுவன் ஒருவன் 83 வயது மூதாட்டியை கற்பழித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துக் கொண்டே போகிறது. அரசு எவ்வளவு தான் தீவிர நடவடைக்கைகளை எடுத்தாலும் கூட இந்த குற்றங்கள் குறைந்த பாடில்லை.
 
அமெரிக்காவில் உள்ள பால்டி மோர் நகரை சேர்ந்த டோரோதிமயே நீல் என்ற 83 வயதான மூதாட்டி தனது வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். 
 
இந்நிலையில் சமீபத்தில் அந்த மூதாட்டியின் வீட்டிற்கு சென்ற 14 வயது சிறுவன் ஒருவன், அந்த பாட்டியை கற்பழித்து கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளான். 
 
இந்த கொலை குறித்து விசாரணை நடத்தி வந்த போலீஸார் அந்த சிறுவனை கைது செய்தனர். போலீஸார் தொடர்ந்து அந்த சிறுவனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்