அரசு பொறியியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர்கள், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமே நியமிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால், அண்ணா பல்கலைக்கழக உதவி பேராசிரியர்கள் இதுவரை அந்த பல்கலைக்கழகத்தின் மூலம் நேரடியாக நியமனம் செய்யப்பட்டு வந்தனர்.
கடந்த 2023 ஆம் ஆண்டு, உதவி பேராசிரியர் உள்பட சில பதவிகளுக்கான நேரடி நியமன அறிவிப்பு வெளியாகி, ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது. ஆனால், பணி நியமனம் குறித்து எந்த தகவலும் வெளியாகாத நிலையில், தற்போது இந்த பணிகளுக்கு போட்டி தேர்வு மூலம் காலியான பதவிகள் பூர்த்தி செய்யப்படும் என அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் பிரகாஷ் என்பவர் அறிவித்துள்ளார்.