கொரோனாவுக்கு கர்நாடக ராஜ்யசபா எம்பி பலியா?

Webdunia
வியாழன், 17 செப்டம்பர் 2020 (17:50 IST)
உலகம் முழுவதும் மனித இனத்தையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ் பல விஐபிகளின் உயிரையும் பறித்து உள்ளது என்பது தெரிந்ததே. ஏற்கனவே தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் எம்எல்ஏக்கள், எம்பிக்கள், அமைச்சர்கள் என ஒரு சிலர் கொரோனாவுக்கு உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தற்போது ராஜ்யசபா எம்பி ஒருவர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளதாக வெளிவந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் சற்றுமுன் வெளியான தகவலின்படி அசோக் கஸ்டி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர் மரணம் அடையவில்லை என்றும் கூறப்படுகிறது

ஒருசில ஊடகங்கள் அசோக் கஸ்டி மரணம் அடைந்துவிட்டதாகவும் சில ஊடகங்கள் கவலைக்கிடமாக இருப்பதாகவும் மாறி மாறி செய்திகள் வெளியிட்டு வருவதால் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது;.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்