மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள தாமோ என்ற நகரில் தனியார் மருத்துவமனையில் இதயவியல் நிபுணர் என்று ஜான் கெம் என்பவர் பணிபுரிந்தார். இந்த நிலையில் அவர் போலி ஆவணங்கள் மூலம் மருத்துவமனையில் சேர்ந்து இதய அறுவை சிகிச்சை நோயாளிகளுக்கு செய்ததாகவும் அவர் அறுவை சிகிச்சை செய்த ஏழு பேர் உயிரிழந்ததாகவும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.