விரைவில் ஷூட்டிங் வருவேன் - நடிகர் பிரகாஷ் ராஜ்

Webdunia
வியாழன், 12 ஆகஸ்ட் 2021 (20:39 IST)
நடிகர் பிரகாஷ் ராஜ் தற்போது திருச்சிற்றம்பலம் படத்தின் படப்பிடிப்புக்காக சென்னையில் தங்கி இருந்தார். அப்போது தவறி கீழே விழுந்தார். இதற்கான அறுவைச் சிகிச்சை முடிந்துள்ள நிலையில் அவர் நன்றி தெரிவித்து டுவீட் பதிவிட்டுள்ளார். 

நடிகர் பிரகாஷ் ராஜ் தென்னிந்திய மொழிகளில் மறுபடியும் பிஸியான நடிகராக வலம் வர ஆரம்பித்துள்ளார். இப்போது தனுஷ் நடிக்கும் திருச்சிற்றம்பலம் படத்தின் படப்பிடிப்புக்காக சென்னை கோவளத்தில் தங்கி இருந்தார். அப்போது அவர் வீட்டில் தவறி விழுந்ததில் தோள்பட்டையில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அவர் சிகிச்சைக்காக ஐதராபாத் சென்றுள்ளார். இந்நிலையில் அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. இதுகுறித்து தனது சமூக வவலைதளப் பக்கத்தில் ஒரு புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். அதில், எனக்கு அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. எனது நண்பரும் மருத்துவருமான டாக்டர் குர்வா ரெட்டிக்கு நன்றி…நான் குணமடைய வேண்டுமென பிரார்த்தித்து வரும் ரசிகர்களுக்கு நன்றி…நா, நட்ன் விரைவில் ஷூட்டிங்கு வருவேன் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், பிரகாஷ்  நடிப்பில் சமீபத்தில் நவரசா படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்