கேஜிஎஃப் 2-வில் பிரகாஷ் ராஜ்; துவங்கியது படப்பிடிப்பு: வைரலாகும் புகைப்படங்கள்!

புதன், 26 ஆகஸ்ட் 2020 (13:42 IST)
பெங்களூரில் இன்று முதல் கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் அத்தியாயத்தின் படபிடிப்பு துவங்கியுள்ளது. 

 
கன்னட ஆக்‌ஷன் ஸ்டார் யஷ் நடிப்பில் 2018ல் வெளியான படம் கேஜிஎஃப். தங்க சுரங்கத்தை மையமாக கொண்ட அனல் பறக்கு ஆக்‌ஷன் கதையாக இதை எழுதி இயக்கி இருந்தார் பிரசாத் நீல். கன்னடம் மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வெளியான இந்த படமும், இதன் பாடல்களும் இந்தியா முழுவதும் பட்டித்தொட்டியெங்கும் ஹிட் அடித்தன. இந்தியாவில் மட்டுமல்லாது சீனா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் வெளியாகி வசூல் சாதனை படைத்தது கேஜிஎஃப் அத்தியாயம் ஒன்று.
இந்நிலையில் இதன் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் பலர் தீவிரமாக காத்துக்கொண்டிருக்கின்றனர். சில மாதங்களுக்கு முன்பு இரண்டாம் அத்தியாயத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ட்ரெண்டானது. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட படப்பிடிப்பு தற்போது மீண்டும் துவங்கியுள்ளது. 
 
ஆம், பெங்களூரில் இன்று முதல் துவங்கிய படப்பிடிப்பில் நடிகர் பிரகாஷ் ராஜ் இணைந்துள்ளார். பிரகாஷ் ராஜ் எந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என சரியான தகவல் வெளியாகாத நிலையில் படப்பிடிப்பு புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்