சிவகார்த்திகேயன் படத்தில் இருந்து நீக்கப்பட்டாரா சிபி சக்ரவர்த்தி?... இணையத்தில் பரவும் தகவல்!

vinoth
திங்கள், 3 பிப்ரவரி 2025 (08:02 IST)
டான் திரைப்படத்தின் வெற்றியை அடுத்து கவனிக்கப்படும் இயக்குனரானார் சிபி சக்ரவர்த்தி. சிவகார்த்திகேயனின் எஸ்கே ப்ரொடக்‌ஷன்ஸும் லைகா நிறுவனமும் இணைந்து ஒரு தயாரித்த டான் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது.

இதையடுத்து அவர் ரஜினிகாந்த் மற்றும் நானி ஆகியோரை வைத்து அவர் படம் இயக்குவதாக இருந்தது. ஆனால் இரண்டுமே பல்வேறு காரணங்களால் நடக்கவில்லை. அதனால் அவர் தன்னுடைய முதல் பட ஹீரோவான சிவகார்த்திகேயன் நடிப்பில் மீண்டும் ஒரு படத்தை இயக்க ஒப்பந்தம் ஆனார்.. இந்த படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் மற்றும் ஜெகதீஷ் ஆகியோர் இணைந்து தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் இந்த படத்தின் ஷூட்டிங் சில நாட்கள் மட்டுமே நடந்த நிலையில் ராஷ்மிகாவின் தேதிகளுக்காக தள்ளிவைக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. ஆனால் இப்போது இந்த படத்தில் இருந்தே இயக்குனர் சிபி சக்ர்வர்த்தி வெளியேற்றப்பட்டுள்ளதாகவும், இயக்குனர் அஹமத் இந்த படத்தை இயக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரலாம் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்