பிரசாந்த் நீல் படத்தில் இணையும் டோவினோ தாமஸ்… ஷூட்டிங் முதல் ரிலீஸ் வரை வெளிவந்த தகவல்!

vinoth

திங்கள், 3 பிப்ரவரி 2025 (07:55 IST)
கேஜிஎஃப் படங்களுக்குப் பிறகு இந்தியா முழுவதும் கவனிக்கப்படும் இயக்குனராக ஆகியுள்ளார் பிரசாந்த் நீல். இதையடுத்து அவர் இயக்கிய சலார் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸாகி தோல்வி படமானது. இதனால் அதன் இரண்டாம் பாகம் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இதையடுத்து அவர் ஜூனியர் என் டி ஆர் நடிப்பில் ஒரு படத்தை இயக்க ஒப்பந்தமானார். கடந்த ஆண்டு அந்த படத்தின் பூஜை நடந்தது. விரைவில் ஷூட்டிங் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பல மாதங்களாக அதுபற்றி எந்த அப்டேட்டும் வரவில்லை.

இந்நிலையில் பிப்ரவரி மாத இறுதியில் அதன் ஷூட்டிங் தொடங்கும் என்றும் படத்தின் ரிலீஸ் அடுத்த ஆண்டு கோடைவிடுமுறையில் இருக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தில் டோவினோ தாமஸ் மற்றும் ருக்மினி வசந்த் ஆகியோர் முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. ரவி பஸ்ரூர் இசையமைக்க, புவன் கௌடா ஒளிப்பதிவை மேற்கொள்ள உள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்