அதனால் எதிர்பார்ப்போடு வந்த ரசிகர்கள் ஏமாற்றமடைந்து கடுப்பான ரசிகர்கள் சமூகவலைதளங்களில் படத்தையும் படக்குழுவினரையும் கடுமையாக கேலி செய்தனர். சூர்யா, சிவா மற்றும் ஞானவேல் ராஜா ஆகிய மூவரையும் பல விதங்களில் கேலி செய்து மீம்களை பறக்கவிட்டனர். இதனால் சூர்யாவின் திரை வாழ்க்கையில் அஞ்சான் படத்துக்குப் பிறகு ஒரு மோசமான படமாக கங்குவா அமைந்தது.
இந்நிலையில் கங்குவா படத்தில் நடித்திருந்த நடிகர் போஸ் வெங்கட் தற்போது அளித்துள்ள ஒரு நேர்காணலில் கங்குவா படம் குறித்து பேசியுள்ளார். அதில் “சினிமா எடுப்பவர்கள் அதில் கோடிக்கணக்கில் முதலீடு செய்கிறார்கள். மூன்று மணிநேரம் மக்களை சித்ரவதை செய்யவா ஒருவர் படம் எடுப்பார்? அப்படியெல்லாம் யாரும் நினைக்க மாட்டார்கள்.