வரிசையாக அடுத்தடுத்த பாகங்கள் வர இருக்கும் டிமாண்டி காலணி… இயக்குனர் திட்டம்!

Webdunia
வியாழன், 27 ஜூலை 2023 (07:45 IST)
தமிழ் சினிமாவில் பேய் படங்களின் வரவு உச்சத்தில் இருந்தபோது வெளியாகி கவனத்தை ஈர்த்த படம் தான் டிமாண்ட்டி காலணி. இந்த படத்தில் அருள்நிதி, சனத் மற்றும் ரமேஷ் திலக் ஆகியோர் நடித்திருந்த நிலையில் அறிமுக இயக்குனரான அஜய் ஞானமுத்து இயக்கி இருந்தார். குறைந்த பட்ஜெட்டில் பெரும்பாலான காட்சிகள் ஒரு வீட்டுக்குள்ளாகவே படமாக்கி முடிக்கப்பட்டு வெளியான இந்த படம் நல்ல வசூலைக் குவித்தது.

இதையடுத்து இப்போது அதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதிலும் அருள்நிதி நடிக்க, அஜய் ஞானமுத்து எழுதி இயக்கி, தயாரிக்கிறார். மற்ற முக்கியக் கதாபாத்திரங்களில் ப்ரியா பவானி சங்கர், அருண்பாண்டியன், முத்துக்குமார், மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா ரவிசந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர். சாம் சி எஸ் இசையமைக்கிறார்.

இந்த படம் செப்டம்பர் மாதம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இப்போது இந்த படத்தின் மூன்றாவது மற்றும் நான்காவது பாகங்களும் அடுத்தடுத்து வரும் என தகவல்கள் உருவாகி வருகின்றன. இதற்கான தடயங்கள் தற்போது உருவாகி வரும் இரண்டாம் பாகத்திலேயே இடம்பெறும் எனவும் சொல்லப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்