அரையிறுதியில் பிரான்ஸ் அபாரம்.. இறுதிப்போட்டியில் அர்ஜெண்டினாவுடன் மோதல்!

Webdunia
வியாழன், 15 டிசம்பர் 2022 (08:13 IST)
கடந்த சில நாட்களாக உலக கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்று வரும் நிலையில் நேற்று நள்ளிரவு இரண்டாவது அரையிறுதி போட்டி நடைபெற்றது. 
 
பிரான்ஸ் மற்றும் மொரோக்கோ அணிகளுக்கிடையே நடைபெற்ற இந்த போட்டியில் ஆரம்பம் முதலே பிரான்ஸ் அணி வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர் என்பதும் அதன் பின் அடுத்தடுத்து இரண்டு கோல்கள் போட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
மொரோக்கோ அணி வீரர்கள் எவ்வளவோ முயற்சித்தும் கடைசிவரை ஒரு கோல் கூட போட வில்லை என்பதால் இந்த போட்டியில் பிரான்ஸ் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் மொரோக்கோ அணியை அபாரமாக வெற்றி பெற்றது 
 
இதனால் பிரான்ஸ் அணி இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணியுடன் மோத உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. டிசம்பர் 17ஆம் தேதி மூன்றாம் இடத்துக்கான போட்டியும், டிசம்பர் 18ஆம் தேதி இறுதிப் போட்டியும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்