இலங்கை அணியில் ஒரு வீரராகவும் கேப்டனாகவும் 10 ஆண்டுகளுக்கு மேல் விளையாடியவர் ஏஞ்சலோ மேத்யூஸ். இலங்கை அணி தனது ஜாம்பவான் பேட்ஸ்மேன்களான ஜெயசூர்யா, சங்ககரா, ஜெயவர்த்தனே போன்றவர்களை இழந்தபிறகு அந்த அணி சரிவை சந்தித்தது. ஆனால் அந்த காலத்தில் தோன்றிய ஒரு திறமையான வீரராக மேத்யூஸ் கருதப்படுகிறார்.
இலங்கை அணியாக இருந்தாலும், எந்த அணியாக இருந்தாலும் கேப்டனாக இருக்கும் போது உங்கள் தலையில் முடிக் குறைவாகவே இருக்கும். ஏனென்றால் கேப்டன் என்பது ஒரு பொறுப்பு. அனைவரின் பார்வையும் உங்கள் மீது இருக்கும். அந்த பொறுப்பு வலியாக இருந்தாலும் நான் அதை அனுபவித்தே செய்தேன்” எனக் கூறியுள்ளார்.