டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், இதில் திண்டுக்கல் அணியின் கேப்டனும் இந்திய அணியின் முன்னாள் வீரருமான ரவிச்சந்திரன் அஸ்வின் அடுத்தடுத்து இரு சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். சில நாட்களுக்கு முன்னர் நடுவர் உடன் வாக்குவாதம் செய்ததோடு பேட்டையும் க்ளவுசையும் தூக்கி வீசியதற்காக அஸ்வினுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.