115வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை: மார்ச் 8 முதல் என்ன நடக்கும்?

Webdunia
திங்கள், 28 பிப்ரவரி 2022 (07:00 IST)
தமிழகத்தில் சென்னை உள்பட இந்தியா முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் கடந்த 115 நாட்களாக உயராமல் இருந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இன்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன
 
ஆனால் அதே நேரத்தில் மார்ச் 7ஆம் தேதி உடன் உத்தரபிரதேசம் உள்பட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவடையும் நிலையில் அதன் பிறகு மார்ச் 8ஆம் தேதி குறைந்தபட்சம் பத்து ரூபாய் பெட்ரோல் மற்றும் டீசல் உயரும் என்றும் அதிகபட்சமாக 20 ரூபாய் உயர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில் இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 101.40 எனவும் இன்று சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 91.43 எனவும் விற்பனையாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்