மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைபெற்றுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது வடக்கு திசையில் நகர்ந்து வருவதாகவும், இன்று மாலை ஐந்து முப்பது மணி அளவில் அது காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து அதே பகுதியில் நிலவி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகத்தில் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும், குறிப்பாக கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆனால், அதே நேரத்தில் தமிழகத்தில் நாளை அதிகபட்ச வெப்பநிலை பதிவாகும் என்றும், சில இடங்களில் மூன்று டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக வெப்பம் பதிவாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.