டெல்லி ஜவஹர்லால் நேரு மெட்ரோ நிலையத்தின் கேட் நம்பர் 2 இன்று பொதுமக்கள் பயணத்திற்கு அனுமதியில்லை என்றும், தற்காலிகமாக மூடப்பட்டது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. காரணம், 2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் குற்றம் சாட்டப்பட்ட ராணா இன்று நள்ளிரவில் இந்தியா வர உள்ளார் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இதே நேரத்தில், பல பாதுகாப்பு படைகள் மற்றும் டெல்லி காவல்துறையினர் சுற்றுவட்டாரத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பாதுகாப்பு வாகனங்களின் இயக்கத்தில் இடையூறு ஏற்படாமல் இருக்க அருகிலுள்ள சாலைகளிலும் போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.