இங்கதான் ஊரடங்கு.. அங்க இல்ல..! – ஆந்திராவுக்கு படையெடுக்கும் தமிழக மதுப்பிரியர்கள்!

Webdunia
செவ்வாய், 25 மே 2021 (10:53 IST)
தமிழகத்தில் கொரோனா காரணமாக முழு முடக்கம் அமலில் உள்ள நிலையில் மதுப்பிரியர்கள் ஆந்திராவுக்கு சென்று மதுவாங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் முழு முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் உள்ளிட்ட அனைத்து மதுபானக்கடைகளும் முழுவதும் மூடப்பட்டுள்ளன. இதனால் எல்லையோர மாவட்டங்களில் வசிக்கும் மது பிரியர்கள் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் சென்று மது வாங்குவதாக கூறப்படுகிறது.

ஆந்திராவை ஒட்டியுள்ள திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த கும்மிடிபூண்டி, சுண்ணாம்புகுளம், ஆரம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மதுப்பிரியர்கள் இருசக்கர வாகனங்கள் மூலமாகவோ அல்லது நடந்து சென்றோ ஆந்திராவில் உள்ள மதுக்கடைகளில் மது வாங்குவதாக கூறப்படுகிறது. இதனால் எல்லையில் சோதனையை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்