அரண்மனை 4 படத்தில் இருந்து விலகினாரா விஜய் சேதுபதி?

Webdunia
சனி, 18 பிப்ரவரி 2023 (08:12 IST)
தமிழில் நகைச்சுவை பேய்ப் படங்களின் வரிசையைத் துவக்கிவைத்ததில் 2014ல் வெளிவந்த அரண்மனை படத்தின் வெற்றிக்கு முக்கியப் பங்கு உண்டு. 2014ல் துவங்கிய அரண்மனை வரிசையின் மூன்று பாகங்கள் இதுவரை வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இப்போது சுந்தர் சி லைகா தயாரிப்பில் அரண்மனை படத்தின் நான்காம் பாகத்தை தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால் இப்போது விஜய் சேதுபதி அந்த படத்தில் இருந்து வெளியேறி விட்டதாகவும், அவருக்குப் பதிலாக சுந்தர் சி –தானே நடித்து இயக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. விஜய் சேதுபதி ஏற்கனவே ஒத்துக் கொண்ட படங்களை நடிக்க உள்ளதால் இந்த படத்துக்கு உடனடியாக தேதிகள் ஒதுக்குவதில் சிக்கல் எழுந்ததால் விலகுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்