மேரியோபோல் நகரத்தின் தகர்க்கப்பட்ட திரையரங்கம்

Webdunia
சனி, 19 மார்ச் 2022 (00:14 IST)
மேரியோபோலில் குண்டுவீசித் தகர்க்கப்பட்ட திரையரங்கில் தஞ்மடைந்திருந்த பொதுமக்களில் ஒரு பகுதியினர் இடிபாடுகளுக்குள் இருந்து வெளியே வந்துவிட்டதாக மனித உரிமைகள் ஆணையர் லுயுட்மிலா டெனிசோவா தெரிவித்துள்ளார்.
 
இதுவரை திரையரங்கின் அடித்தளத்தில் தஞ்சமடைந்திருந்த 130 பேர் மீட்கப்பட்டுள்ளனர். ஆனால், இது இன்னும் உள்ளே சிக்கியிருப்பவர்களில் பத்தில் ஒரு பங்கு மட்டுமே என்று அவர்களை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வரும் யுக்ரேன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
மூலோபாய துறைமுக நகரத்தில் 80% கட்டடங்கள் சேதமடைந்துள்ளன அல்லது அழிக்கப்பட்டுள்ளன. அழிக்கப்பட்ட திரையரங்கின் சமீபத்திய படங்கள் இவை. இத்தாலிய அரசாங்கம், இதைக் கூடிய விரைவில் மீண்டும் கட்டுவதற்கு முன்வந்துள்ளது.
 
யுக்ரேனில் மார்ச் 17 வரை குறைந்தது 816 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள், 1,333 பேர் காயம் அடைந்துள்ளார்கள் என்று ஐ.நா கூறுகிறது.
 
ஐ.நா உரிமைகள் அலுவலகத்தின்படி, பெரும்பாலான உயிரிழப்புகள் கனரக பீரங்கிகள், ஷெல் குண்டு தாக்குதல், ஏவுகணைகள் மற்றும் வான்வழித் தாக்குதல்கள் போன்றவற்றால் ஏற்பட்டவை.
 
மேரியோபோல் உள்ளிட்ட மோசமான பாதிப்பிற்குள்ளான சில நகரங்களில் இருந்து ஐ.நா உரிமைகள் அலுவலகத்தால் தகவல்களைச் சேகரிக்க முடியாததால், உண்மையான எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் என்று கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்