இதற்கிடையில் அவர் திடீரென நான் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அந்த படம் ஹிட்டானதை தொடர்ந்து அவர் தொடர்ந்து நடிகராக கவனம் செலுத்த ஆரம்பித்தார். தற்போது தன் படங்களுக்கேக் கூட இசையமைப்பதை அவர் குறைத்துக் கொண்டுள்ளார். தற்போது அவரது சக்தி திருமகன் மற்றும் மார்கன் ஆகிய இரு படங்கள் ரிலீஸுக்குக் காத்திருக்கின்றன. இதையடுத்து விஜய் ஆண்டனி, அடுத்து தான் நடிக்கும் படத்தை இயக்க சமீபத்தில் ரிலீஸான ஜெண்டில்வுமன் படத்தின் இயக்குனர் ஜோஸ்வா சேதுராமனை ஒப்பந்தம் செய்துள்ளார். இந்த படம் ஒரு கோர்ட் ரூம் டிராமாவாக உருவாக உள்ளதாக சொல்லப்பட்டது.