டிடெக்டிவ் நேசமணி… வடிவேலு போஸடரை வைத்து விளையாடிய குறும்புக்காரர்!

Webdunia
வெள்ளி, 13 ஆகஸ்ட் 2021 (10:01 IST)
நடிகர் வடிவேலு எப்போது நடிப்பார் என்று கேள்வி ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது.

நடிகர் வடிவேலு 2011 ஆம் ஆண்டுக்குப் பிறகு சினிமாவில் தீவிரமாக நடிக்கவில்லை. இடையில் சில படங்களில் நடித்திருந்தாலும் எதுவும் அவர் பெயர் சொல்லும் படங்களாக அமையவில்லை. இந்நிலையில் தனது வெற்றிப்படமான இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால் அந்த படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அதில் தொடர்ந்து நடிக்க மறுத்தார். இதனால் அவருக்கு தயாரிப்பாளர் சங்கம் ரெட் கார்டு போட்டது. இந்நிலையில் இப்போது வடிவேலுவே நடிக்காமல் இருக்க முடியவில்லை என்று கூறி எப்படியாவது விரைவில் ஒப்பனை போட்டுக்கொள்ள வேண்டும் என்று ஆர்வமாக உள்ளாராம்.

இந்நிலையில் வடிவேலு தயாரிப்பாளர் சி வி குமாரின் தயாரிப்பில் டிடெக்டிவ் நேசமணி என்ற பெயரில் ஒரு படத்தை தயாரிக்க போவதாக ஒரு போஸ்டர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த போஸ்டர் மிகவும் தத்ரூபமாக இருந்ததால் அனைவரும் உண்மை என்று நம்பிவிட்டனர்.

இந்நிலையில் சம்மந்தப்பட்ட தயாரிப்பாளரான சி வி குமார் ‘Fake news uhh இருந்தாலும் ஓரு நியாயம் வேண்டாமாப்பா … ஆனா தலைவர் டிசைன்ல சூப்பர்ப்பா …. யாருப்பா நீ … எனக்கே உன்ன பாக்கணும்ணு ஆசையா இருக்கு …..’ எனத் தனது முகநூலில் உறுதிப்படுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்