அந்த சம்பளத்தில் ஒரு பாட்டு எடுப்பேனே? ஷங்கருக்கு ஷாக் கொடுத்த இந்தி நடிகை!

வியாழன், 12 ஆகஸ்ட் 2021 (15:28 IST)
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் படத்தில் கியாரா அத்வானி 4 கோடிக்கும் மேல் சம்பளம் கேட்டுள்ளாராம்.

இந்தியன் 2 திரைப்படத்தை இயக்கி வந்த ஷங்கர் இப்போது வெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ் என்ற நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாக இருக்கும் ஐம்பதாவது திரைப்படத்தில் ராம் சரண் தேஜா ஹீரோவாக நடிக்க உள்ளார். இந்த படம் அவரது 15 ஆவது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் பட்ஜெட் ஷங்கரின் கடைசி படங்களை விட மிகவும் கம்மியாம். ரூ 170 கோடி ரூபாய் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் 5 மாதங்களுக்குப் பிறகே தொடங்க உள்ளதாம். இந்நிலையில் இப்போது படத்துக்கான மற்ற கலைஞர்கள் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறதாம்.

இந்நிலையில் இந்த படத்தில் நடிக்க கியாரா அத்வானி 4.5 கோடிக்கும் மேல் கேட்டு இயக்குனர் ஷங்கருக்கே ஷாக் கொடுத்துள்ளாராம் கியாரா அத்வானி. அதையடுத்து நடந்த பேச்சுவார்த்தையில் இப்போது 3.75 கோடி சம்பளம் என ஒப்பந்தம் ஆகியுள்ளாராம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்