பூஜா ஹெக்டேவுக்கு நன்றி தெரிவித்த சூர்யா 44 படக்குழு!

vinoth
சனி, 28 செப்டம்பர் 2024 (08:06 IST)
சூர்யா, கார்த்திக் சுப்பராஜ் கூட்டணியில் ஒரு படம் உருவாகி வரும் ‘சூர்யா 44’ எனத் தற்காலிகமாக அழைக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தை கார்த்திக் சுப்பராஜ் மற்றும் சூர்யா ஆகிய இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர். படத்தின் ஒளிப்பதிவாளராக ஸ்ரேயாஸ் கிருஷ்ணா மற்றும் படத்தொகுப்பாளராக ஷஃபீக் முகமது அலியும், ஸ்டண்ட் இயக்குனராக கெச்சா காம்பக்தேயும், இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணனும் பணியாற்றுகின்றனர்.

படத்தில் சூர்யாவோடு பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், டாணாக்காரன் தமிழ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். வில்லனாக உறியடி விஜயகுமார் நடிப்பதாக சொல்லப்படுகிறது. இன்னும் படத்தின் தலைப்பு அறிவிக்கப்படாத நிலையில் சமீபத்தில் ஒரு கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி கவனம் பெற்றது. இந்த படத்தின் முதல் கட்ட ஷூட்டிங்குகள் அந்தமான் மற்றும் கொடைக்கானல் பகுதியில் நடந்தன. தற்போது இறுதிகட்ட ஷூட்டிங் சென்னையில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கும் பூஜா ஹெக்டே தன்னுடைய காட்சிகளை நிறைவு செய்துள்ளார். இதையடுத்து படக்குழு அவருக்கு நன்றி தெரிவித்து கேக் வெட்டி வழியனுப்பி வைத்துள்ளனர். இன்னும் சில நாட்களில் சூர்யாவின் காட்சிகளும் படமாக்கி முடிக்கப்படும் என தெரிகிறது. அதன் பின்னர் சில வாரங்களில் ஒட்டுமொத்த ஷூட்டிங்கும் நிறைவடையும் என தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்