சூர்யா 44 படத்துக்காக சென்னையில் உருவாகும் அந்தமான் செட்!

vinoth

வியாழன், 19 செப்டம்பர் 2024 (15:47 IST)
சூர்யா, கார்த்திக் சுப்பராஜ் கூட்டணியில் ஒரு படம் உருவாகி வரும் ‘சூர்யா 44’ எனத் தற்காலிகமாக அழைக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தை கார்த்திக் சுப்பராஜ் மற்றும் சூர்யா ஆகிய இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர். படத்தின் ஒளிப்பதிவாளராக ஸ்ரேயாஸ் கிருஷ்ணா மற்றும் படத்தொகுப்பாளராக ஷஃபீக் முகமது அலியும், ஸ்டண்ட் இயக்குனராக கெச்சா காம்பக்தேயும், இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணனும் பணியாற்றுகின்றனர்.

படத்தில் சூர்யாவோடு பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், டாணாக்காரன் தமிழ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். வில்லனாக உறியடி விஜயகுமார் நடிப்பதாக சொல்லப்படுகிறது. இன்னும் படத்தின் தலைப்பு அறிவிக்கப்படாத நிலையில் சமீபத்தில் ஒரு கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி கவனம் பெற்றது.

இந்த படத்தின் முதல் கட்ட ஷூட்டிங்குகள் அந்தமான் மற்றும் கொடைக்கானல் பகுதியில் நடந்தன. அடுத்த கடட் ஷூட்டிங் சென்னையில் விரைவில் தொடங்கும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் சென்னையில் அந்தமான் பகுதிகளில் எடுக்கப்பட்ட காட்சிகளை மேட்ச் செய்வதற்காக சிறைச்சாலை செட் ஒன்று போடப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்