விஜய்யை அடுத்து சூர்யாவுடனும் கூட்டணியா… பிரசாந்தின் அடுத்த பட அப்டேட்!

vinoth

செவ்வாய், 10 செப்டம்பர் 2024 (09:45 IST)
சூர்யா, கார்த்திக் சுப்பராஜ் கூட்டணியில் ஒரு படம் உருவாகி வரும் ‘சூர்யா 44’ எனத் தற்காலிகமாக அழைக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தை கார்த்திக் சுப்பராஜ் மற்றும் சூர்யா ஆகிய இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர். படத்தின் ஒளிப்பதிவாளராக ஸ்ரேயாஸ் கிருஷ்ணா மற்றும் படத்தொகுப்பாளராக ஷஃபீக் முகமது அலியும், ஸ்டண்ட் இயக்குனராக கெச்சா காம்பக்தேயும், இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணனும் பணியாற்றுகின்றனர்.

படத்தில் சூர்யாவோடு பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், டாணாக்காரன் தமிழ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். வில்லனாக உறியடி விஜயகுமார் நடிப்பதாக சொல்லப்படுகிறது. இன்னும் படத்தின் தலைப்பு அறிவிக்கப்படாத நிலையில் சமீபத்தில் ஒரு கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி கவனம் பெற்றது.

இப்போது ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இந்த படத்தில் பிரசாந்தை ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் பிரசாந்த், விஜய்யின் கோட் படத்தில் அவரின் நண்பராக நடித்திருந்தார். அவர் ஹீரோவாக நடித்த அந்தகன் திரைப்படமும் நல்ல வெற்றியைப் பெற்றது. இதையடுத்து அவர் தொடர்ச்சியாக படங்களில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்