அயலான் படத்துக்கு நான் சம்பளமே வாங்கிக்கொள்ளவில்லை… சிவகார்த்திகெயன் தகவல்!

Webdunia
வியாழன், 28 டிசம்பர் 2023 (07:07 IST)
சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் யோகி பாபு நடிப்பில் இயக்குனர் ரவிகுமார் இயக்கத்தில் ‘அயலான்’ திரைப்படம் கடந்த 5 ஆண்டுகளாக உருவாக்கத்தில் இருந்து பல்வேறு பொருளாதார பிரச்சனைகளைத் தாண்டி இப்போது ரிலீஸ் கட்டத்தை எட்டியுள்ளது. பல கட்ட தாமதங்களுக்கு பிறகு இப்போது ஒருவழியாக பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று முன் தினம் சென்னை தாஜ் கோரமண்டல் ஓட்டலில் பிரம்மாண்டமாக நடந்தது. இதில் படக்குழுவினரோடு சிவகார்த்திகேயன் மற்றும் ஏ ஆர் ரஹ்மான் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்நிலையில் அயலான் படம் பற்றி பேசியுள்ள சிவகார்த்திகேயன் இந்த படம் ரிலீஸ் ஆவதற்காக தான் சம்பளமே வாங்கிக் கொள்ளவில்லை என கூறியுள்ளார். இதுபற்றி பேசியுள்ள அவர் “இந்த படம் ரிலீஸ் ஆகவேண்டுமா அல்லது எனக்கு சம்பளம் வேண்டுமா என்பதுதான் கேள்வியாக இருந்தது. அதனால் நான் அயலான் படத்துக்காக சம்பளமே வாங்கிக் கொள்ளவில்லை. ” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்