இந்தி நடிகர்களை பின்னுக்குத் தள்ளி பிரபாஸ் முதலிடம்!

Webdunia
திங்கள், 20 டிசம்பர் 2021 (16:30 IST)
ஒரு படத்தின் பட்டெட்டில் பாதியை நடிகர் பிரபாஸ் சம்பளமாகப் பெருவதாக தகவல் வெளியாகிறது.

சில ஆண்டுகளுக்கு முன் நடிகர் பிரபாஸ், ராணா, அனுஷ்கா , ரம்யா கிருஷ்ணன் ஆகியொர் நடிப்பில் வெளியான படம் பாகுபலி. இப்படத்தின் இரண்டு பாகங்களிலும் பிரபாஸ் ஹீரோவாக நடித்திருந்தார்.

இப்படம் இந்திய மொழிகளில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் வசூலை வாரிக் குவித்தது.
எனவே, இப்படத்திற்குப் பிறகு பிரபாஸின் மார்க்கெட் அதிகரித்தது. அத்துடன் அவரது சம்பளமும் ரூ.100 கோடியை தாண்டியதாகத் தகவல் வெளியாண்டது.

தற்போது, பிரபாஸ் நடிப்பில் ஆதிபுரூஸ், ராதே ஷ்யாம் உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகிறது. ஏற்கனவே ஆதிபுரூஸ் படத்திற்கு படத்தின் பட்ஜெட்டில் பாதியை அவர் சம்பளமாகப் பெற்றதாக கூறப்பட்ட நிலையில் அடுத்து பிரபாஸ் நடிக்கவுள்ள ஸ்பிரிட் படத்திற்காக அவரது சம்பளம் ரூ.150 கோடி பேசியுள்ளதாக தகவல் வெளியாகிறது.

இந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் பெரும் நடிகர்களில் சல்மான்கான், அக்‌ஷய்குமார் ஆகியோர் பின்னுக்குத் தள்ளி பிரபாஸ் இப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்