கமல் தயாரிப்பில் அடுத்து நடிக்க உள்ள இரண்டு ஹீரோக்கள்… வெளியான தகவல்!

Webdunia
வெள்ளி, 27 மே 2022 (16:15 IST)
நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் அடுத்தடுத்து படங்களை தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார். உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் பல வெற்றி படங்களை தயாரித்து உள்ளது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக எந்த படத்தையும் அந்நிறுவனம் தயாரிக்கவில்லை.

இதையடுத்து இப்போது மீண்டும் தயாரிப்பைத் தொடங்கியுள்ள அடுத்தடுத்து பல ஹீரோக்களை அனுகி கால்ஷீட் கேட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் சிவகார்த்திகேயனை அடுத்து ஜெயம் ரவி மற்றும் சூர்யா ஆகிய இருவரும் கமலின் தயாரிப்பில் நடிக்க ஆர்வமாக உள்ளதாகவும், அதற்கான முதல் கட்ட பேச்சுவார்த்தை நடந்துவருவதாகவும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்