மும்பை அணியை 150க்குள் சுருட்டிய சிஎஸ்கே.. இன்று யாருக்கு வெற்றி..!

Webdunia
சனி, 6 மே 2023 (17:13 IST)
சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே ஐபிஎல் தொடரின் 49வது போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 
 
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற தல தோனி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் மும்பை அணி பேட்டிங் செய்தது. 
 
அந்த அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்த நிலையில் க்ரின், ரோஹித் சர்மா, இஷான் கிஷான் ஆகியோர்களின் விக்கெட்டுக்கள் அடுத்தடுத்து விழுந்தது
 
ருப்பினும் வதேரா மட்டும் ஓரளவு நிலைத்து விளையாடி 64 ரன்கள் எடுத்தார். இறுதியில் மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 139 ரன் அடித்தது. 
 
இந்த நிலையில் இன்னும் சில நிமிடங்களில் சென்னை அணி 140 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியில் வெல்லும் அணி எது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்