இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய எட்டு அணிகள் கலந்து கொள்ளும் சாம்பியன் டிராபி கிரிக்கெட் தொடர் இன்று பாகிஸ்தானில் தொடங்குகிறது.
இன்றைய முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், நியூசிலாந்து ஆகிய அணிகள் ஏ குழுவிலும், ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் பி குழுவிலும் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.