ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் முக்கியமான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா அணிகள் மோத உள்ளன. இன்னும் சில நிமிடங்களில் தொடங்கவுள்ள இந்த போட்டிக்கு டாஸ் சற்று முன்பு நடைபெற்றது.
டாஸ் போட்டதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக மீண்டும் பொறுப்பேற்றுள்ள மகேந்திர சிங் டோனி தோல்வியடைந்தார். கொல்கத்தா அணியின் தலைவர் ரஹானே டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
இதையடுத்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் பேட்டிங் செய்ய தயாராக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் கேப்டனாக திகழும் தோனி, தனது லீடர்ஷிப் மூலம் சென்னை அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்வாரா என்பதை இன்றைய போட்டியின் முடிவில் காணலாம்.