முதல் இன்னிங்ஸில் கணேசன் பெரியசாமி வீசிய வைடு யார்க்கரை குர்ஜாப்னீத் சிங் தட்டிவிட, அஷ்வின் நான்-ஸ்ட்ரைக்கர் முனைக்கு வீசினார். அது மிஸ் ஆக, பந்துவீச்சாளரும் திரும்பி வரவில்லை. இதனால் முதல் ரன் போனஸாக கிடைத்தது. அடுத்தடுத்த த்ரோக்களும் தவற, மொத்தமாக மூன்று போனஸ் ரன்கள் கிடைத்தன. கேமராக்கள் அஷ்வின் பக்கம் திரும்பியபோது, அவர் வெளிப்படையாகவே கோபத்தில் இருந்தார், ஆனால் நிதானத்தை கடைப்பிடிக்க முயன்றார்.
TNPL போட்டிகள் எப்போதும் அஷ்வினின் பொறுமையை சோதிப்பதாகவே அமைகின்றன. சமீபத்தில் ஒரு போட்டியில், சாய் கிஷோர் பந்துவீச்சில் பந்து ஸ்டெம்புக்கு வெளியே பிட்ச் ஆகியும் அஷ்வின் எல்.பி.டபிள்யூ. அவுட் வழங்கப்பட்டபோது, நடுவரிடம் கடுமையாக வாக்குவாதம் செய்தார்.
ஆனால், இந்த முறை, ரன் அவுட் வாய்ப்புகளை தவறவிட்டாலும், அவரது அணி அவருக்கு மகிழ்ச்சி கொடுக்க ஒரு காரணம் இருந்தது. மதுரை பாந்தர்ஸ் அணி 150 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதீக் உர் ரஹ்மான் 50 ரன்கள் அடித்தாலும், பெரியசாமி மற்றும் டிடி சந்திரசேகரின் சிறப்பான பந்துவீச்சு மதுரை அணியின் ரன் வேகத்தைக் கட்டுப்படுத்தியது.
பதிலுக்கு, தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்கிய அஷ்வின் 29 பந்துகளில் 49 ரன்கள் குவித்து அசத்தினார். பின்னர், சிவம் சிங் 41 பந்துகளில் 86 ரன்களும், ஹன்னி சைனி 7 பந்துகளில் 14 ரன்களும் அடித்து, 13 ஓவர்களுக்குள்ளேயே ஆட்டத்தை முடித்தனர். இது திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் இரண்டாவது வெற்றி. இதனால் அவர்கள் புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளனர்.