தென் ஆப்பிரிக்காவின் இந்த வெற்றியை இந்தியாவில் உள்ள ரசிகர்களும் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். அதற்கு முக்கியக் காரணம் அந்த அணியின் கேப்டன் டெம்பா பவுமா. கருப்பினத்தைச் சேர்ந்தவரான அவருடைய உயரம் மற்றும் பேட்டிங் ஸ்டைல் ஆகியவற்றின் காரணமாக பல கேலிகளையும் விமர்சனங்களையும் எதிர்கொண்டார். இதற்கு மேலாக தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியில் இருக்கும் இட ஒதுக்கீட்டு முறையால்தான் அவர் அணியில் நீடிக்கிறார் என்றெல்லாம் விமர்சனங்கள் வைக்கப்பட்டன.