இதனால் ரசிகர்களே சிஎஸ்கேவை விமர்சித்து வரும் நிலையில், சிஎஸ்கே அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கையில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக மொத்தமாக இந்த தொடரிலிருந்து விலகுகிறார். இனி வரும் போட்டிகளில் அவர் பங்கேற்க மாட்டார் என்பதால், மீண்டும் தோனியை சிஎஸ்கேவின் கேப்டனாக அறிவித்துள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
இந்நிலையில் தொடரில் இருந்து வெளியேறிய ருத்துராஜுக்கு பதில் சி எஸ் கே அணியில் இணையப் போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அந்த பட்டியலில் நான்கு வீரர்களின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளன. பிரித்வி ஷா, டிவால்ட் பிரவீஸ், ஆயுஷ் மத்ரே மற்றும் டேவிட் வார்னர் ஆகியோரில் ஒருவர் வாங்கப்படலாம் என சொல்லப்படுகிறது.