இலங்கை கொடுத்த இலக்கு.. அடுத்தடுத்து விழுந்த இந்தியாவின் 2 விக்கெட்டுக்கள்..!

Siva
வெள்ளி, 2 ஆகஸ்ட் 2024 (19:40 IST)
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கொழும்பு நகரில் நடைபெற்று வரும் நிலையில் இன்றைய போட்டிகள் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது.
 
அந்த அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து  230 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரரான நிசாங்கா 56 ரன்களும், டுனித் என்பவர் 67 ரன்களும், எடுத்தனர். இதனை அடுத்து 231 ரன்களும், என்ற இலக்கை நோக்கி இந்திய அணி தற்போது விளையாடுகிறது.
 
தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா அபாரமாக விளையாடி 58 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். சுப்மன்கில்  16 ரன்கள் எடுத்து அவுட் ஆகிய நிலையில் தற்போது விராத் கோஹ்லி  மற்றும் வாஷிங்டன் சுந்தர் விளையாடி வருகின்றனர்.
 
சற்றுமுன் வரை இந்திய அணி 15 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 86 ரன்கள் எடுத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்