243 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி.. தென்னாப்பிரிக்காவின் மோசமான தோல்வி..!

Webdunia
ஞாயிறு, 5 நவம்பர் 2023 (20:36 IST)
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையிலான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 243 ரன்கள் வித்தியாசத்தில் மிக அபாரமாக வெற்றி பெற்ற நிலையில், தென் ஆப்பிரிக்கா மிக மோசமான தோல்வியை பதிவு செய்தது.

இன்றைய போட்டியில் இந்தியா டாஸ் வென்ற நிலையில் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. அந்த அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 326 ரன்கள் எடுத்தது. விராட் கோலி மிக அபாரமாக சதம் அடித்தார் என்பதும் ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக 77 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 327 ரன்கள் என்ற இலக்கை நோக்கி தென்ஆப்பிரிக்க அணி விளையாடிய நிலையில் அந்த அணியின் அனைத்து பேட்ஸ்மேன்களும் இன்று சொதப்பியதால் வெறும் 83 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகிவிட்டனர்

இந்த நிலையில் இந்தியா இதுவரை உலக கோப்பையில் தோல்வியே  அடையாத அணியாக 8 போட்டிகளிலும் வென்று உள்ளது என்பதும் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்