ஹர்திக் பாண்ட்யாவை முதுகில் குத்துகிறார்களா மும்பை இந்தியன்ஸ் சீனியர் வீரர்கள்!

vinoth

புதன், 9 ஏப்ரல் 2025 (18:01 IST)
ஐபிஎல் தொடரில் அதிக முறை சாம்பியன் பெற்ற அணிகளில் ஒன்று மும்பை இந்தியன்ஸ். அந்த அணி இதுவரை 5 முறைக் கோப்பையை வென்றுள்ளது. ஆனால் கடந்த ஆண்டு அந்த அணியில் கேப்டன் பொறுப்பு ரோஹித்திடம் இருந்து ஹர்திக் பாண்ட்யாவுக்குக் கைமாற்றப்பட்டது. அது முதல் அந்த அணியில் பல பிரச்சனைகள் உருவாகியுள்ளன.

இந்நிலையில் இந்த ஆண்டு அந்த அணி மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதுவரை விளையாடிய ஐந்து போட்டிகளில் விளையாடி நான்கில் தோற்றுள்ளது. இதனால் அந்த அணி புள்ளிப்பட்டியலில் பின்னடைவை சந்தித்துள்ளது.

இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் சீனியர் வீரர்களான ரோஹித் ஷர்மா, சூர்யகுமார் யாதவ் உள்ளிட்டவர்களிடம் இருந்து கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுக்கு போதுமான ஒத்துழைப்புக் கிடைக்கவில்லை என்றும் அவர்கள் வேண்டுமென்றே போட்டிகளில் சொதப்புகிறார்கள் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர். ரோஹித் ஷர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கி ஹர்திக் பாண்ட்யாவை கேப்டனாக நியமித்ததில் இருந்தே அணிக்குள் சுமூகமான உறவு இல்லை என்று சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்