குட்கா பொருட்களுக்கு மேலும் ஓராண்டு தடை: தமிழக அரசு உத்தரவு

Webdunia
வெள்ளி, 27 மே 2022 (09:38 IST)
குட்கா பொருட்களுக்கு மேலும் ஓராண்டு தடை: தமிழக அரசு உத்தரவு
தமிழகத்தில் குட்கா பொருள்களுக்கு மேலும் ஒரு ஆண்டு தடை என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது 
 
தமிழ்நாட்டில் ஏற்கனவே குட்கா உள்ளிட்ட பொருட்களுக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்த நிலையில் தற்போது மேலும் ஓராண்டு தடை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது 
 
குட்கா பான்மசாலா புகையிலை பொருட்கள் தயாரிப்பு மற்றும் விநியோகம் ஆகியவற்றுக்கு தடை என்றும் குட்கா போன்ற பொருட்களை பதுக்கி வைப்பது குற்றச் செயல் என்றும் தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது 
 
தமிழ்நாட்டில் குட்கா பொருட்கள் முழுவதுமாக தடை செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சிகள் வேண்டுகோளுக்கு இணங்க இந்த தடை நீட்டிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்