பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு

Webdunia
புதன், 25 அக்டோபர் 2023 (14:36 IST)
வரும் 2024 ஆம் ஆண்டு  ஜனவரி 7 ஆம் தேதி பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு நடத்தப்படும் என்று டி.ஆர்.பி அறிவித்துள்ளது.

தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இந்த ஆட்சியில் மக்களுக்கான நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்,  வரும் 2024 ஆம் ஆண்டு  ஜனவரி 7 ஆம் தேதி பட்டதாரி ஆசியர்கள் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு நடத்தப்படும் என்று டி.ஆர்.பி அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு ஆசிரியர்கள் தேர்வு வாரியம் அறிவித்துள்ளதாவது:

2,222 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு ஜனவரி 7 ஆம் தேதி நடைபெறும். எனவே www.trb.tn.gov.in என்ற இணையதளத்தில்  நவம்பர் 1-30 வரை தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்