பிரதமர் வருகையையொட்டி, ஸ்ரீரங்கம் கோயிலை சுற்றியுள்ள கடைகள் மூட உத்தரவு

Sinoj
வியாழன், 18 ஜனவரி 2024 (18:24 IST)
பிரதமர் மோடி,  ஜனவரி 20 ஆம் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வருகை தரவுள்ளார். பிரதமர் வருகையையொட்டி, கோயிலை சுற்றியுள்ள கடைகளை இன்று மாலை முதல் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

கேலா இந்தியா விளையாட்டு போட்டிகள் தமிழகத்தில்   நாளை முதல் ( ஜனவரி 19 ஆம் தேதி) முதல் 31 ஆம் தேதி வரை நடக்கவுள்ளது.

இந்த நிலையில், கேலா இந்தியா போட்டிகளை முன்னிட்டு தமிழ்நாட்டிலுள்ள விளையாட்டு அரங்கங்கள் சர்வதேச தரத்தில் மேம்படுத்தப்பட்டுள்ள  நிலையில் இப்போட்டியில்  6,500 விளையாட்டு வீரர் - வீராங்கனையர் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில்,   கேலா இந்தியா விளையாட்டுப் போட்டி தொடக்க விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி நாளை சென்னை வருகிறார்.

இதனையடுத்து, பிரதமர் மோடி,  ஜனவரி 20 ஆம் தேதி திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வருகை தரவுள்ளார். பிரதமர் வருகையையொட்டி, கோயிலை சுற்றியுள்ள கடைகளை இன்று மாலை முதல் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

வரும் சனிக்கிழமை மதியம் வரை கடைகளை மூட வேண்டும் என போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

அதன்படி இன்றும், நாளையும், கடைகளுக்கு விடுமுறை என கடை உரிமையாளர்கள் பேப்பரில் எழுதி ஒட்டியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்