சரண்டர் ஆகிறாரா செந்தில்பாலாஜியின் சகோதரர்? வழக்கறிஞர் தகவல்

Webdunia
புதன், 16 ஆகஸ்ட் 2023 (12:01 IST)
செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை நான்கு முறை சம்மன் அனுப்பியும் அவர் இன்னும் ஆஜராகவில்லை 
 
 இந்த நிலையில் அசோக் குமார் ஆஜர் ஆவதற்கான காலக்கெடு முடிவடைந்துள்ள நிலையில் அவர் சரண்டர் ஆக இருப்பதாக அவருடைய வழக்கறிஞர் தகவல் தெரிவித்துள்ளார்.  
 
அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் விரைவில் சரண்டர் ஆவார் என்றும் எந்த வழக்குக்காக சோதனை நடந்தது என்பதை குற்றப்பத்திரிகையில் பார்த்த பின்னர் சரண்டர் ஆக இருப்பதாகவும் அசோக் குமார் வழக்கறிஞர் தகவல் தெரிவித்துள்ளார்  
சமீபத்தில் சோக்குமார் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் அவர் கைது செய்யப்படவில்லை என அமலாக்கத்துறை தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்