பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக இலங்கைக்கு சென்றிருந்தார். அவருக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இலங்கை அதிபர் அனுரா குமார திசாநாயக்கவை பிரதமர் மோடி சந்தித்து, மீனவர் பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் இரு தலைவர்களும் செய்தியாளர்களை சந்தித்தனர்.
பிரதமர் மோடி இலங்கை பயணத்தை வெற்றிகரமாக முடித்தவுடன் கிளம்பிய சில நிமிடங்களில், 14 தமிழக மீனவர்களை இலங்கை அரசு நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்ததாக அறிவிக்கப்பட்டது. அவர்கள் இன்று அல்லது நாளை தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.