கரையை கடந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்! – மழை தொடரும்..!

Webdunia
வெள்ளி, 19 நவம்பர் 2021 (08:08 IST)
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்த நிலையில் மழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று அதிகாலை சென்னை – புதுச்சேரி இடையே காற்றழுத்த தாழ்வு நிலை கரையை கடந்தது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்தாலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்