இந்த கூட்டத்தில் கார்கே பேசியபோது, கட்சி அமைப்புகளை உருவாக்குவதில் மாவட்ட தலைவர்களின் பங்கு முக்கியமானதாக இருக்க வேண்டும் என்றும், அவர்களுடைய வழிகாட்டுதலின் படி தான் கட்சி நிர்வாகிகள் பாரபட்சமின்றி நியமனம் செய்யப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
மேலும், அனைத்து மாநிலங்களில் உள்ள மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து நானும் ராகுல் காந்தியும் பேசியுள்ளோம் என்றும், அவர்களுடைய கருத்துக்களை நாங்கள் பரிசீலனை செய்ய உள்ளோம் என்றும் தெரிவித்தார்.
மேலும், கட்சி பணிக்கு உதவாதவர்கள், கட்சி பணியை விருப்பமாகச் செய்யாதவர்கள் தயவு செய்து ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றாதவர்கள் கட்சிக்கு தேவையில்லை," என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.