13 பேர் உடல்கள் எடுத்து செல்லும் ஆம்புலன்ஸ் விபத்து! – அடுத்தடுத்த விபத்தால் பரபரப்பு!

Webdunia
வியாழன், 9 டிசம்பர் 2021 (14:20 IST)
ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தவர்கள் உடல் சூலூர் விமான நிலையம் கொண்டு செல்லப்படும் நிலையில் அடுத்தடுத்து விபத்துகள் ஏற்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று குன்னூரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்கு உள்ளானதில் முப்படை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்களது உடலுக்கு உரிய மரியாதை செய்யப்பட்டு தற்போது அவை ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலமாக சூலூர் விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றன.

இந்நிலையில் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு பாதுகாப்பாக போலீஸ் வாகனங்களும் சென்றன. அப்போது பர்லியாறு அருகே சென்றுக் கொண்டிருந்தபோது பாதுகாப்புக்கு சென்ற போலீஸ் வாகனம் விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் காவலர்கள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.

தற்போது மேட்டுப்பாளையம் அருகே வாகனங்கள் சென்றுக் கொண்டிருந்த நிலையில் 13 பேரை கொண்டு செல்லும் ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஒன்று முன்னால் சென்ற வாகனத்தின் மீது மோதியதால் சேதமடைந்தது. இதனால் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. வாகனம் சேதமடைந்ததால் வேறு வாகனத்தில் உடல் மாற்றப்பட்டு மீண்டும் கொண்டு செல்லப்பட்டுள்ளது. அடுத்தடுத்து ஏற்பட்ட இந்த விபத்துகள் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்