எல்.ஐ.சி ஐபிஓ பங்குகளை வாங்க குவியும் விண்ணப்பங்கள்!

Webdunia
புதன், 4 மே 2022 (15:36 IST)
தமிழ் எதிர்பார்ப்புக்கு இடையே இன்று எல்ஐசி ஐபிஓ பங்குகள் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் அந்தப் பங்குகளை வாங்க விண்ணப்பங்கள் குவிந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது 
 
எல்.ஐ.சியின் 3.5 சதவீத பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் 20,000 கோடி திரட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 15 லட்சத்து 80 ஆயிரம் பங்குகளை எல்ஐசி ஊழியர்களுக்கும் 2 கோடியே 21 லட்சம் பங்குகள் பாலிசிதாரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
 
இந்த நிலையில் இன்று காலை பங்குகளை வாங்க விண்ணப்பங்கள் குவிந்து வந்ததாகவும் முதல் இரண்டு மணி நேரத்திலேயே 30 சதவீத பங்குகள் கோரி விண்ணப்பங்கள் வந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
மத்திய அரசு எதிர்பார்த்ததை விட மிக அதிகமாக எல்.ஐ.சி ஐபிஓ பங்குகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்