பங்குச்சந்தை வரலாறு காணாத வீழ்ச்சி: இன்று ஒரே நாளில் சென்செக்ஸ் 1250 புள்ளிகள் சரிவு

புதன், 4 மே 2022 (15:31 IST)
இந்திய பங்கு சந்தை இன்று காலை ஏற்றத்துடன் தொடங்கிய நிலையில் சற்று முன் முடிவடைந்த நிலையில் வரலாறு காணாத வகையில் வீழ்ச்சி அடைந்துள்ளது 
 
இந்திய பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 1223 புள்ளிகள் சரிந்து 55 ஆயிரத்து 752 என்ற புள்ளியில் வர்த்தகம் முடிவடைந்துள்ளது 
 
அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 376 புள்ளிகள் சரிந்து 16692 என்ற புள்ளிகளில் வர்த்தகம் முடிந்து அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
வரலாறு காணாத வகையில் 1200 க்கும் அதிகமான சென்செக்ஸ் புள்ளிகள் சரிந்தது முதலீட்டாளர்கள் கடும் அதிர்ச்சியை அளித்துள்ளது
 
ரெப்போ வட்டி விகிதம் உயர்வு, எல்ஐசி ஐபிஓ அறிமுகம் ஆகியவை இன்றைய பங்கு சந்தை வீழ்ச்சி காரணமாக இருக்கும் என கருதப்படுகிறது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்