கணவன் - மனைவி சண்டையை விலக்கிய நபர் படுகொலை: அதிர்ச்சி சம்பவம்

Webdunia
வியாழன், 20 அக்டோபர் 2022 (22:03 IST)
கணவன் மனைவி சண்டையை சமாதானப்படுத்திய ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள போபால் என்ற பகுதியில் பப்பு மற்றும் அவரது மனைவி சமீபத்தில் சண்டை போட்டுள்ளனர்
 
செவ்வாய்க்கிழமை அசைவம் சமைக்கக் கூடாது என்று மனைவி கூற அதற்கு கணவன் சமைத்து ஆக வேண்டும் என்று கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்ட நிலையில் பக்கத்து வீட்டுக்காரர் பில்லு என்பவர்  இருவரையும் சமாதானப்படுத்தி சமாதானப்படுத்தினார் 
 
இந்த நிலையில் கணவன் மனைவியை சமாதானப்படுத்தி விட்ட மகிழ்ச்சியில் பில்லு வீட்டுக்குள் வந்த நிலையில் தனது மனைவிக்கு ஆதரவாக அவர் கூறியதாக எண்ணிய கணவர் பில்லுவை அடித்தே கொன்றுள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் பப்புவை போலீசார் கைது செய்துள்ளனர்
 
Edited  by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்